Home இலங்கை டிரான் அலஸிற்கு பிணை

டிரான் அலஸிற்கு பிணை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ராடா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் டிரான் அலஸிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 200 மில்லியன் ரூபா சுனாமி நிதி மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு அண்மையில் டிரான் அலஸ் கைது செய்பய்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடுவதாகவும் மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன அறிவித்திருந்தார். இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்த டிரான் அலஸிற்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More