Home இலங்கை எக்நெலிகொட வழக்கில் மேலும் இருவருக்கு பிணை

எக்நெலிகொட வழக்கில் மேலும் இருவருக்கு பிணை

by admin

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட வழக்குடன் தொடர்புடைய மேலும் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் சில இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு அவிசாவலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் நான்காம் மற்றும் ஐந்தாம் பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More