Home பிரதான செய்திகள் சிம்பாப்வே ரசிகர்கள் இனவாத அடிப்படையில் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு

சிம்பாப்வே ரசிகர்கள் இனவாத அடிப்படையில் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

சிம்பாப்வே ரசிகர்கள் இனவாத அடிப்படையில் நடந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது ஒரு தொகுதி பார்வையாளர்கள் இனவாத அடிப்படையில் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட வீரர் மெல்கம் வோலரை இனவாத அடிப்படையில் ரசிகர்கள் தூற்றியதாகவும் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் சிம்பாப்வே கிரிக்கட் சபை குற்றம் சுமத்தியுள்ளது. வோலர் பிடியெடுப்பு ஒன்றை கைநழுவ விட்ட போது ரசிர்கள் இனவாத அடிப்படையில் தூற்றியதாகவும் இது மிகவும் இழிவான செயல் எனவும் கிரிக்கட் சபை குற்றம் சுமத்தியுள்ளது. சிம்பாப்வேயில் கடுமையான நிற பேதம் இன பேதம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More