Home இலங்கை தமது பிள்ளைகள் அப்பாவிகள் – ஹாவா குழு என குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் தாய்மார்

தமது பிள்ளைகள் அப்பாவிகள் – ஹாவா குழு என குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் தாய்மார்

by admin

தமது பிள்ளைகள் அப்பாவிகள் எனவும்  பொய்யாக அவர்கள் மீது ஹாவா குழு என  குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும்  அண்மையில் கைதுசெய்யப்பட்ட 11 இளைஞர்களின் தாய்மார் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழில் கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞர்கள் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட போதே குறித்த இளைஞர்களின் தாய்மார்  நீதிமன்ற வளாகத்தில்  கண்ணீர் மல்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்திலும் தம் மீதான அடக்குமுறைகள் தொடர்வதாகவும் உண்மையில் ஹாவா குழுவின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட வேண்டுமெனவும் அவர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

 பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் சந்தேகத்தின் போில் கைது செய்யப்பட்ட  குறித்த 11 பேரும்   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை  தொடா்ந்து  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More