Home இந்தியா அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் இடம்பெற்ற தேர்தலின்; வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது.

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் இடம்பெற்ற தேர்தலின்; வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது.

by admin


அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சை ஆகிய தமிழ்நாடு சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியின் நெல்லிக்குப்பம் சட்டசபை தொகுதி ஆகியவற்றுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. காலை 10 மணியளவில் வெளியான முடிவுகளின்படி தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரங்கசாமி சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதேபோல், அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

வாக்கு எண்ணும் அறைகளுக்குள் வேட்பாளர்களின் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையை கண்காணித்து வருகின்றனர் இன்று பிற்பகலுக்குள் வெற்றி-தோல்வி முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டசபைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேல் மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது. இதேபோல், புதுவையில் நெல்லிக்குப்பம் சட்டசபை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கண்ட 4 தொகுதிகளிலும் கடந்த 19ம் திகதி வாக்குப்பதிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
00

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More