Home இலங்கை கரடியனாறு பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் 2 கைக்குண்டுகளும் ஒரு சைனைட் குப்பியும் மீட்பு

கரடியனாறு பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் 2 கைக்குண்டுகளும் ஒரு சைனைட் குப்பியும் மீட்பு

by admin

கரடியனாறு பகுதியில் உள்ள வெலிகஹாகண்டிய வாவிக்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியில்  புதைக்கப்பட்ட நிலையில் 2 கைக்குண்டுகளும் ஒரு சைனைட் குப்பியும்  மீட்கப்பட்டுள்ளன.

காவல்துறை விசேட அதிரப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு  குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கைக்குண்டுகளும் ஒரு சைனைட் குப்பியும் மேலதிக விசாரணைகளுக்காக கரடியனாறு காவல் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மதவாச்சி பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி வெடிப்பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் படி 45 கிலோகிராம் கல்லுடைக்கும் வெடிப்பொருட்களும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள்  இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இது குறித்து  மதவாச்சி  காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More