Home இந்தியா மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலின் 8ஆம் ஆண்டு நிறைவு தினம் நினைவுகூரப்படுகின்றது

மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலின் 8ஆம் ஆண்டு நிறைவு தினம் நினைவுகூரப்படுகின்றது

by admin

மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலின் 8ஆம் ஆண்டு நிறைவு தினம் இன்று சனிக்கிழமை நினைவுகூரப்படுகின்ற நிலையில், குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுப்பட்டுள்ளது.  இதனையடுத்து மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, மும்பையில் பிரசித்தி பெற்ற சமய வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் முக்கிய வீதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 2008 ஆண்டு மும்பை சி.எஸ்.டி, காமா மருத்துவமனை, தாஜ் விடுதி, உள்ளிட்ட இடங்களில் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள், வெளிநாட்டினர் என 166 பேர் கொல்லப்பட்டதோடு, அதிகமானோர்  காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகச்செய்திகள்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More