Home இலங்கை ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் றோ அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை – பாதுகாப்புச் செயலாளர்

ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் றோ அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை – பாதுகாப்புச் செயலாளர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையர்கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்வது தொடர்பில் இந்திய உளவுப் பிரிவு எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இலங்கையர்கள் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ள அவர் எவ்வாறெனினும், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இராணுவ முகாம்களில் புத்தர் சிலைகளை அமைப்பதற்கு தடை எதுவும் கிடையாது என்ற போதிலும், முகாம்களுக்கு வெளியில் வடக்கில் புத்தர் சிலைகளை நிறுவ வேண்டாம் என முப்படையினருக்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More