Home இலங்கை காவல்துறையினரின் நடவடிக்கைக்கு கண்டனம்

காவல்துறையினரின் நடவடிக்கைக்கு கண்டனம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தை கலைப்பதற்கு கண்ணீர்ப் புகைக் குண்டு பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.

இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்ய வேண்டும், வெளிவாரி பட்டக் கற்கை நெறிகளை ரத்து செய்யக் கூடாது, பாடசாலைகளில் பணம் பெற்றுக்கொள்ளக் கூடாது போன்ற சில கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தின் போது தாக்குதலுக்கு இலக்கான ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More