Home இலங்கை அனைத்து கட்சிகளும் இணங்கினால் பழைய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் – லக்ஸ்மன் கிரியல்ல

அனைத்து கட்சிகளும் இணங்கினால் பழைய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் – லக்ஸ்மன் கிரியல்ல

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


அனைத்து கட்சிகளும் இணங்கினால் பழைய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டால் விருப்பு வாக்கு அடிப்படையில் தேர்தலை நடத்த முடியும் எனவும் அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு காலம் தாமதிக்கும் என்றால் பழைய முறையில் தேர்தலை நடத்த முடியும் எனவும் அதற்கு அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More