Home இலங்கை சிறைச்சாலைகளில் சிலருக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுகின்றன – ஹிருனிகா குற்றச்சாட்டு

சிறைச்சாலைகளில் சிலருக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுகின்றன – ஹிருனிகா குற்றச்சாட்டு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிறைச்சாலைகளில் சில செல்வாக்கு மிக்கவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்குள் மாபீயா செயற்பட்டு வருவதாகவும் சில செல்வாக்கு மிகுந்த கைதிகளுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுவதாகவும் பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் துமிந்த சில்வா தமது தந்தையை கொலை செய்தவர் எனவும், அவருடன் தமக்கு கோபமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவ சான்றிதழைக் காண்பித்து துமிந்த சில்வா சிறைச்சாலை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த மூன்றாம் திகதி அவர் மருத்துவமனையில் குடும்ப உறவினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடியதாகவும் ஹிருனிகா குற்றம் சுமத்தியுள்ளார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More