Home இலங்கை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டதாக ஜயம்பதி விக்ரமரட்ன முறைப்பாடு

அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டதாக ஜயம்பதி விக்ரமரட்ன முறைப்பாடு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். அரசியல் சாசன சபை தொடர்பிலான பணிகளில் ஈடுபட்டுள்ளமையை கண்டித்து இவ்வாறு மிரட்டல் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தமக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் தொலைபேசி அழைப்பு குறித்து ஜயம்பதி விக்ரமரட்ன பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இந்த  அச்சுறுத்தல் குறித்து முறைப்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More