Home இலங்கை புதிய அரசியல் சாசனம் பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது – ஜனாதிபதி

புதிய அரசியல் சாசனம் பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது – ஜனாதிபதி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் பொய்யான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொய்யான பிரச்சாரங்களினால் மக்கள் மீளவும் துன்பங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நேற்றைய தினம் பாராளுமன்றில்  பாதுகாப்பு அமைச்சு தொடர்பிலான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசனம் தொடர்பிலான உப குழுக்கள் சமர்ப்பிக்கும் யோசனைகள் இன்னமும் பேச்சுவார்த்தை மட்டத்திலேயே காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஜனாதிபதி இதுவரையில் இந்த விடயங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும்  இவ்வாறான ஓர் பின்னணியில் அரசியல் சாசனம் தொடர்பில் சிலர் தேவையற்ற பீதியை கிளப்பி வருவதாகவும்  குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More