Home இலங்கை இலங்கையர்கள் முட்டாள்கள் என கடவுள்கள் எள்ளி நகைப்பார்கள் – நீதி அமைச்சர்

இலங்கையர்கள் முட்டாள்கள் என கடவுள்கள் எள்ளி நகைப்பார்கள் – நீதி அமைச்சர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையர்கள் அடி முட்டாள்கள் என கடவுளர் எள்ளி நகையாடுவர் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பௌத்த விஹாரைகளில் புத்தர் சிலைகளுக்கு மேலதிகமாக சிவபெருமான், விநாயகர், முருகன் போன்ற கடவுளரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சிலைகளை வணங்கி வழிபாடு செய்யும் மக்கள் வீதியில் இறங்கி மோதிக் கொள்வதாகவும் இதைப் பார்க்கும் கடவுளர் இலங்கையர்கள் அடி முட்டாள்கள் என கருதுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லூர், கோணஸ்வரம் மற்றும் கதிர்காமம் போன்ற வழிபாட்டுத் தளங்களுக்கு அதிகளவில் பௌத்தர்கள் செல்கின்றார்கள் எனவும் நாகதீபத்தில் தமிழர்கள் அதிகளவில் வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடிமட்ட மக்களிடையே இணக்கப்பாடு காணப்படுகின்றது என்ற போதிலும் உயர்மட்ட அரசியல்வாதிகள் கடும்போக்குவாதத்தை விதைத்து அரசியல் லாபமீட்ட முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More