Home உலகம்சீனாவில் சிறுநீரக மாற்று சிகிச்சையில் ஈடுபட்டதற்காக 16 பேருக்கு சிறை

சீனாவில் சிறுநீரக மாற்று சிகிச்சையில் ஈடுபட்டதற்காக 16 பேருக்கு சிறை

by admin

சீனாவில் சட்டவிரோதமாக சிறுநீரக மாற்று சிகிச்சையில் ஈடுபட்டதற்காக 16 பேருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர் மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில்  ஷான்டூங் மாகாணத்தை சேர்ந்த இரு மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர் ஒருவர் மற்றும் தாதி ஒருவரும் உள்ளடங்குகின்றனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வேண்டுபவர்களுக்கு சிறுநீரகங்களை விற்க தயாராக இருந்தவர்களுடன் இந்த மருத்துவத்துறையை சேர்ந்தவர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஒரு சிறுநீரகத்திற்கு சுமார் 60 ஆயிரம் டொலர்கள் வரை நோயாளிகளிடமிருந்து கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More