Home இலங்கை வடக்கில் உயர் காவல்துறை அதிகாரிகள் இருவர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாக குற்றச்சாட்டு

வடக்கில் உயர் காவல்துறை அதிகாரிகள் இருவர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாக குற்றச்சாட்டு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கில் உயர் காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கில் கடமையாற்றி வரும் துணை காவல்துறை அத்தியட்சகர்கள் இருவர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரதேச வர்த்தகர்கள் மற்றும் காவல் நிலையமொன்றின் பொறுப்பதிகாரி ஆகியோர் காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் வடக்கிற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் சரத் குமாரவிடமும், காவல்துறை தலைமையகத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

பணமாகவும், இலத்திரனியல் சாதனங்களாகவும் ஒரு துணை காவல்துறை அத்தியட்சகர் லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு காங்கேசன்துறை சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ரஞ்சித் மா சிங்க உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தண்டனை அடிப்படையில் இடமாற்றம் பெற்று வடக்கில் கடமையாற்றி வரும் மற்றுமொரு துணை காவல்துறை அத்தியட்சகரும் இவ்வாறு லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More