குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரேஸிலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் தனது முன்னாள் மனைவி, மகன் உள்ளிட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 11 பேரை கொன்றதுடன் தன்னைத் தானே சுட்டும் உயிரிழந்துள்ளார். சாஓபோலோ (Sao Paulo )நகரிலிருந்து 100 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கம்பினாஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். குடும்பப் பிரச்சினை காரணமாகவே இவ்வாறு குறித்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
பிரேஸிலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 12 பேர் பலி
313
Spread the love
previous post

