Home உலகம் கடத்தப்பட்ட ஈராக்கிய பெண் ஊடகவியலாளர் விடுதலை

கடத்தப்பட்ட ஈராக்கிய பெண் ஊடகவியலாளர் விடுதலை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடத்தப்பட்ட ஈராக்கிய பெண் ஊடகவியலாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஈராக்கிய பெண் ஊடவியலாளர் அப்றா அல் குவாஸி  (Afrah al-Qaisi )இனந்தெரியாத நபர்களினால் கடந்த வாரம் கடத்தப்பட்டிருந்தார்.

தலைநகர் பாக்தாத்தில் வைத்து கடத்தப்பட்ட பெண் ஊடவியலாளர் எவ்வித பாதிப்புக்களும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளரின் கார், மடிக்கணனி  மற்றும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவையையும் கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளனர். தாம் நலமாக இருப்பதாகவும் தம்மை கடத்தல்காரர்கள் நல்லவிதமாக நடத்தியதாகவும் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பெண் ஊடகவியலாளர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அண்மைக்காலமாக விமர்சனம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More