Home இலங்கை பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும் – பிரதமர்

பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும் – பிரதமர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மட்டுமன்றி தென் இந்தியாவிற்கும் சேவையாற்றும் வகையில் விமான நிலையம் தரம் உயர்த்தப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னதாக பலாலிக்கும் மெட்ராஸிற்கும், பலாலிக்கும் திருச்சிக்கும் இடையில் விமான சேவைகள் நடத்தப்பட்டிருந்தன எனவும் தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் பிரதமர்  குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More