Home இலங்கை தமிழக மீனவர்கள் பத்து பேர் கைது

தமிழக மீனவர்கள் பத்து பேர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி பிரவேசித்த தமிழக மீனவர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து; கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைதுகளுடன் மொத்தமாக 61 தமிழக மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்; என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2ம் திகதியே 51 மீனவர்களை விடுதலை செய்வதற்கும், கைப்பற்றப்பட்டுள்ள ஒரு தொகுதி படகுகளை விடுவிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டிருந்தது.இந்த நிலையில் மீளவும் அத்து மீறல்களில் ஈடுபட்ட 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More