Home இலங்கை புதிய அரசியலமைப்பு தமிழர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்க வேண்டும் – டக்ளஸ்

புதிய அரசியலமைப்பு தமிழர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்க வேண்டும் – டக்ளஸ்

by admin

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷகளை பூர்த்தி செய்யாத எந்த தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். புதிய அரசியமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டாலும், தமிழ் மக்கள் இன்னும் தமது நம்பிக்கையைக் கைவிடவில்லை. எனவே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கக்கூடியவாரான பரிந்துரைகள் புதிய அரசியலமைப்பில் உள்ளடங்கியிருக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனான சந்திப்பில் தெரிவித்தார் என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த. மற்றும் தற்போதைய செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோருடனான சந்திப்பு நேற்றையதினம் கொழும்பில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தென் இலங்கை கட்சிகளுக்கு தெளிவுபடுத்துவதும், அர்த்தமுள்ள தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற போதே இன ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதையும் நோக்கமாகக் கொண்டு தென் இலங்கை அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களை தொடர்ச்சியாக சந்தித்துவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மற்றுமொரு சந்திப்பாகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர்களுடனான மேற்படிச் சந்திப்பும் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை அதற்காக எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு, தேசிய நல்லிணக்கம் அர்த்தபூர்வமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் நிகழ்கால அரசியல் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள், தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பு ஊடாக தமக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று நம்புகின்றார்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் அடிப்படைகளைக் கொண்டதாகவே அரசியல் தீர்வு அமைய வேண்டும். தென் இலங்கையில் தற்போது தலைதூக்கியுள்ள அரசியல் தடுமாற்றங்களால், புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டுவிடக் கூடாது.

தென் இலங்கை அரசியல் குழப்பங்கள், ஈ.பி.டி.பியைப் பொறுத்தவரை அக்கறைக்குறியவை இல்லை என்றபோதும், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிடைக்கப்பெறுகின்ற சூழலை பாதுகாப்பதற்கு எமது பங்களிப்பை நாம் பூரணமாக வழங்குவோம் என்றும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  கட்சியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More