Home இந்தியா ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு தீர்ப்பு நாளை:

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு தீர்ப்பு நாளை:

by admin

ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில்  அதற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தமையினால்  தமிழகத்தில் கடந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற இந்த வழக்கு அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் நீதிபதிகள்  ஒத்திவைத்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு  நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என  உச்ச நீதிமன்ற  வட்டார  தகவல்கள்  தெரிவிக்கின்றன.   நீதிமன்ற  உத்தரவு வரும் வரை அவசர சட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு  தெரிவித்துள்ள நிலையில் அனவைரதும் எதிர்பார்ப்பும்  உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்பார்த்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More