Home இலங்கை பிரதமருக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு:-

பிரதமருக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு:-

by admin

உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்திற்கு  பயணம் செய்துள்ள  இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பை சந்தித்துள்ளார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் விரைவில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடவும் இந்த சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைகளுக்கு இடையில் பிணைப்பினை ஏற்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் பேணிப் பாதுகாத்து நிலைநாட்டுவது மிகவும் அவசியமானது என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் தெரிவித்துள்ளார்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More