Home இலங்கை மஹிந்த முதலமைச்சர்களை சந்திப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது – மஹிந்த அமரவீர

மஹிந்த முதலமைச்சர்களை சந்திப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது – மஹிந்த அமரவீர

by admin

குளோபல் தமிழ்ச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, முதலமச்சர்கள் சந்திப்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தொட்டையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மகிந்த ராஜபக்ஸவிற்கும் மாகாண முதலமைச்சர்கள் உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்ற உள்ளதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய அண்மையில் கூறியிருந்தார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒருமைப்பாட்டிற்காக தாம் குறித்த சந்திப்பில் பங்கு பற்றவுள்ளதாக தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே மஹிந்த அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் தேர்தலில் ஒன்றாக இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More