Home இலங்கை யாழில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு உதவிகள்

யாழில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு உதவிகள்

by admin

மனிதாபிமான உதவிகள் எனும் தொணிப்பொருளில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம்(21)  இலங்கைவேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு  முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் தலைவர்  செ.விஐயகாந் தலைமை தாங்கினார்.

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகியமாவட்டங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட ஆயிரத்து 500 மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய 3 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் கைதடி சித்த ஆயுள்வேத வைத்தியசாலை மற்றும்  பாலர் பாடசாலை தளபாடங்கள் வழங்கப்பட்டதுடன் சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளுக்கு தொலைக்காட்சிப்பெட்டியும் வழங்கப்பட்டது

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய  சத்துரு சேனரத்ன முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து யாழ் ஊடக அமையத்தில் யாழ் ஊடகவியாளர்களை சந்தித்து ஊடகத்துறையினர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டதுடன் விசேட ஊடகவியாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More