Home இலங்கை கிழக்கு மாகாணத்தில் ஏப்ரல் மாதத்திற்குள் 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு – முதலமைச்சர்

கிழக்கு மாகாணத்தில் ஏப்ரல் மாதத்திற்குள் 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு – முதலமைச்சர்

by admin

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 4 ஆயிரம் பேருக்கான  வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்

கிழக்கு மாகாணத்தின் அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களே இவ்வாறு நிரப்பப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்

பாடசாலைகளில் நிலவும் காவலாளி வெற்றிடங்கள்,நூலக உதவியாளர்கள் மற்றும் காரியாலய உதவியாளர்கள் போன்றவற்றுக்கு 1000 வெற்றிடங்கள் உள்ளதுடன் அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுப்பதுடன் மேலும் அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்,

பல வருடங்களாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்று  பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியாகும் பட்டதாரிகள் தொழில்வாய்ப்புக்களின்றி சிரமங்களை எதிர்நோக்குவது வேதனையளிப்பதாக உள்ளதாக தெரிவித்த கிழக்கு முதலமைச்சர்  கணிசமான பட்டதாரிகளை அரச தொழிற்துறையில் விரைவில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதிகாரத்தை  வழங்கும் பட்சத்தில் மத்திய அரசாங்கத்தை விட இரட்டிப்பு செயற்திறனுடன் மாகாண சபைகளும்  இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்,

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More