Home இலங்கை அரசியலில் ஈடுபட்டது போதும் என்றே கருதுகின்றேன் – கெஹலிய ரம்புக்வெல்ல

அரசியலில் ஈடுபட்டது போதும் என்றே கருதுகின்றேன் – கெஹலிய ரம்புக்வெல்ல

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசியலில் ஈடுபட்டது போதும் என்றே கருதுகின்றேன் என முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பிரதான காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கு மேல் தாம் அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்பொழுது அரசியலில் ஈடுபட்டது போதும் என்றே கருதுவதாகவும்  எனினும் தற்போதைய அரசாங்கத்தின் மோசமான செயற்பாடுகளினால் அரசியலிலிருந்து விலகிக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் தொழில் வாய்ப்புக்களை வழங்கவில்லை என தம்மீது கட்சிக் கிளைக் காரியாலயங்கள் குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் பாராளுமன்றில் சில மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் தற்போதைக்கு இது பற்றி கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More