Home உலகம் வடகொரிய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்வார்கள்

வடகொரிய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்வார்கள்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடகொரிய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்வார்கள் என அந்நாட்டு அரசாங்கத்திலிருந்து பிளவைடந்துள்ள உயர் அதிகாரி  தே ஜொங் கோ (Thae Yong-ho )தெரிவித்துள்ளார். பி.பி.சீ உலக சேவைக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரிய தலைவர் கிம் ஜொங் இல், அமெரிக்கா மீது அணுவாயுத தாக்குதல் நடத்த முயற்சித்து வருவதாகவும் அவரது அரசாங்கம் வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தை விட்டு விலகியதனால் தமது குடும்பத்தினர் தண்டிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமது சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்படக்கூடிய ஆபத்து காணப்படுவதாகவும் தமது குடும்பத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த வடகொரிய மக்களை பாதுகாக்க தாம் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More