Home இந்தியா நடுக்குப்பத்தில் காவல்வெறி! சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை வெளியிட்ட ஆவணப் படம்!

நடுக்குப்பத்தில் காவல்வெறி! சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை வெளியிட்ட ஆவணப் படம்!

by admin
அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற பண்பாட்டுப் புரட்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன்போது சென்னை மெரீனாக் கடற்கரையிலும் மிகப் பெரியளவில் மக்கள் திரண்டு போராட்டம் இடம்பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஜல்லிக் கட்டுக்கான தடையை நீக்குமாறு தமது முழக்கத்தை வெளிப்படுத்தினர்.
வரலாறு காணாத இந்தப் போராட்டத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பிதமடைந்தது. ஜல்லிகட்டு விடயத்தில் தமிழக அரசு மற்றும் இந்திய அரசு என்பன தமது முடிவுகளை மாற்றிக் கொள்ளும் அளவில் தமிழகமே திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை போராட்டத்தின் இறுதிநாள் போராட்டக் களத்தில் வன்முறை திணிக்கப்பட்டு, இதனை வன்முறைப் போராட்டமாக சித்திரிக்க முற்பட்டுள்ளதாக அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. வன்முறையில் ஈடுபட்டது காவல்துறையினரே என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை நடுக்குப்பத்தில் காவல்வெறி என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட வன்முறைகளை இந்த ஆவணப்படம் துல்லியமாக பதிவு செய்துள்ளது.
காவல்துறையினர் வன்முறையை மேற்கொண்ட இடங்களின் காட்சிகள், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்குமுறல்கள், பொருளாதாரப் பாதிப்புக்கள், காவல்துறையினரின் கொடூரச் செயல்கள் என பலவற்றை இந்த ஆவணப்படம் மக்களின் குரலில் பதிவு செய்துள்ளது.
தமிழக காவல்துறையினர் போராட்டக் களத்தில் மேற்கொண்ட வன்முறை குறித்து இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த ஆவணப்படம் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக உண்மையை எடுத்துரைக்கும் வித்தில் அமைந்துள்ளமை விசேட  அம்சமாகும்.
ஆவணப்படத்தை பார்வையிட https://www.youtube.com/watch?v=ppIW-abjhL0
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More