Home இலங்கை தினமும் தம்மை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்துவதாக தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம்

தினமும் தம்மை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்துவதாக தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம்

by admin

தினமும் தம்மை   நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்துவதாக  தெரிவித்து கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்  ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையெனவும்  கைதிகள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கத்தின்  உத்தரவின்  அடிப்படையிலேயே இச் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுவதாக தெரிவித்துள்ள கைதிகள், தம்மையும் மனிதர்களாகவும் மானமும் உணர்வும் உள்ளவர்களாகவும் மதித்து இச் செயற்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More