Home உலகம் கனடாவில் மசூதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 5 பேர் பலி

கனடாவில் மசூதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 5 பேர் பலி

by admin

கனடாவில் கியூபெக் நகரில் அமைந்துள்ள  இஸ்லாமிய கலாசார மையத்திலுள்ள மசூதியில் நேற்று இரவு தொழுகை நடந்து கொண்டிருந்த வேளை  அங்கு புகுந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்  பலர் காயம் அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்ததும்  குறித்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை  மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அத்துடன் காவல்துறையினர்  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இருவரை கைது செய்துள்ளதாகவும் கலாசார மையத்துக்குள் பதுங்கி இருக்கும் கொலையாளியை கைது செய்யும் நோக்குடன் தேடுதல் மேற்கொள்ளவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


தாக்குதல் நடத்தப்பட்ட மசூதிக்குள் இருந்தவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும்   40 பேர் மட்டும் உள்ளே சிக்கி கொண்டுள்ளதாகவும்  அவர்களை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையினர்  ஈடுபட்டுள்ளனர் nஎனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More