Home இலக்கியம் இராணுவமுகாங்களுக்குள் எனது வீடு – தீபச்செல்வன்

இராணுவமுகாங்களுக்குள் எனது வீடு – தீபச்செல்வன்

by admin

இராணுவமுகாங்களுக்குள் எனது வீடு

புதர் மண்டிய  இருண்ட சமூத்திரத்தின்
மேற்பரப்புப்போல
இறுகத் தாழிடப்பட்ட என் கதவுகளை
சூரியன் ஒருபோதும் தட்டியதில்லை
இராணுவமுகாங்களுக்குள் எனது வீடு

அழிக்கப்பட்ட குடி நிலத்தின் வரைபடம்போல
தழும்புடல்களைக் கொண்டவென்
சிறுவர்கள் எவரும்
பள்ளிப் பேருந்தின் சாளரங்களைத் திறப்பதில்லை
யுத்த டாங்கிகளுக்குள் எனது வீதி

நூற்றாண்டுகளாய் மண்ணுள் புதைக்கப்பட்டாற்போல
உருவழிக்கப்பட்டுப் புன்னகை இழந்த
நம் புரதான நகருக்கு
எப் பறவைகளும் வருவதில்லை
காவலரண்களுக்குள் எனது நகரம்

வாய் பிளந்த பீரங்கிக்குள் இருக்கும்
பதுங்குகுழியைப் போலான தேசத்தில்
எப் பாடல்களும் கேட்பதில்லை
சோதனைச் சாவடிகளுக்குள் எனது நாடு.

– தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More