Home இலங்கை காபெற் வீதிகளில் நெல் உலரவிடும் அவலம் இவ்வருடமும் தொடர்கிறது

காபெற் வீதிகளில் நெல் உலரவிடும் அவலம் இவ்வருடமும் தொடர்கிறது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சியில் தற்போது காலபோக நெல் அறுவடை  ஆரம்பித்துள்ள நிலையில் அறுவடை செய்த நெல்லை உலர வைப்பதற்கான போதியளவு உலரவிடும் தளம் இன்மையால் இவ் வருடமும் காபெற் வீதிகளில் நெல் உலர விடும் அவலம் தொடா்கிறது என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நெல் உலர வைப்பதற்கான தளங்கள் இல்லாததன் காரணமாக வீதிகளில் நெல்லினை காய வைப்பதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயக் குழுக் கூட்டங்களில் நெல் உலர வைப்பதற்கான தளங்கள் இல்லாததன் காரணமாகவே ஈரமாக நெல்லினை விற்பனை செய்வதாகவும் ஒவ்வொரு கமக்கார அமைப்புக்கும் குறைந்தது  நெல் உலர வைப்பதற்கான ஒரு தளத்தினையாவது அமைத்துத் தாருங்கள் என விவசாயிகளினால் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அவை நிறைவேறாததன் காரணமாகவே விவசாயிகள் நெல்லினை வீதிகளில் உலர வைக்கின்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

கடந்த வருடங்களிலும் இந்த நிலைமை தொடர்ந்தது.   இந்த நிலைமையினால் கடந்த காலங்களில்  பல வீதி விபத்துகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More