Home இலங்கை கிளிநொச்சியில் 34 கிலோ கேரள கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் 34 கிலோ கேரள கஞ்சா மீட்பு

by admin

குளோபல்  தமிழ்ச் செய்தியாளர்

கிளிநாச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபரிற்கு கிடைத்த தகவலிற்கமைய விசேட மது ஒழிப்பு காவல்துறையினரால் 34 கிலோ கேரள கஞசா மீட்கப்பட்டுள்ளது,

நேற்று முந்தினம் பளை வத்திராயன் பகுதியிலிருந்து குருணாகல் நோக்கி கார் ஒன்றில் எடுத்த செல்லப்பட்ட கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 11 கிலோ கேரலா கஞ்சாவும் மீட்கப்பட்டது, குறித்த சம்பவத்தின்போது ஒரு மோட்டார் கார், 3 மோட்டார் சைக்கிள்கள், மீன்பிடி வள்ளம் இரண்டு மமற்றும் அதி வலு கொண்ட இஞ்சின் இரண்டும் காவல்துறையினரால் மீட்கப்பட்டது,


சந்தேக நபர்களை 7 நாட்களிற்கு காவல்துறை விசாரணைக்குட்படுத்தவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில்   அவா்களிடம்  விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மேலும் 23 கிலா கேரள கஞசாவை நேற்று சனிக்கிழமை மீட்டனர்.

இன்றய தினம் கிளிநா்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் வெலிக்கன்ன, கிளிநொச்சி உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொசான் ராயபக்ச உள்ளிட்டவர்கள் மீட்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டதுடன் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை பாராட்டியிருந்தமை குறிப்பிட தக்கதாகும்.

குறித்த நடவடிக்கையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் வெலிக்கன்ன அவர்களால் நியமிக்கப்பட்ட மது ஒழிப்பு விசேட குழுவுடன் பளை காவல்துறையினரும் ஈடுபட்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட  காவல்துறை அத்தியட்சகர், பிரதி காவல்துறை அத்தியட்சகர் ரொசான் ராயபக்ச உள்ளிட்ட உயரதிகாரிகளின் வழி நடத்தலில் பளை காவல்துறையினர் பல லட்சம் பெறுதியான கேரலா கஞ்சாக்கள் மீட்கப்பட்டமை குறிப்பிட தக்கதாகும்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More