Home இலங்கை எழுக தமிழ் போராட்டத்தை அரசாங்கம் எதிர்க்கவில்லை – லக்ஸ்மன் கிரியல்ல

எழுக தமிழ் போராட்டத்தை அரசாங்கம் எதிர்க்கவில்லை – லக்ஸ்மன் கிரியல்ல

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எழுக தமிழ் போராட்டத்தை அரசாங்கம் எதிர்க்கவில்லை என பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தினை நடாத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதன் மூலம் நாட்டி எவ்வாறான சுதந்திரமும் ஜனநாயகமும் காணப்படுகின்றது என்பது தெளிவாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பில் போராட்டங்களை நடத்த முடியுமாயின் வடக்கு கிழக்கில் எவரேனும் போராட்டம் நடத்துவதில் தவறில்லை என தெரிவித்துள்ள அவர் இது குறித்து எவரும் அச்சமடையவோ கவலையடைவோ தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு மக்கள் வடக்கிலும் வடக்கு மக்கள் தெற்கிலும் போராட்டங்களை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More