Home இலங்கை ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வடக்கு முதல்வரை சந்திக்க உள்ளனர்

ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வடக்கு முதல்வரை சந்திக்க உள்ளனர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியனவற்றின் பிரதிநிதிகள் இந்த வாரம் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான தூதுவர் Tung-Laï Margue   எதிர்வரும் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் வடக்கு மாகாணத்திற்கு செல்ல உள்ளார். அவருடன்  ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி  Una McCauleyயும்; இணைந்து கொள்ள உள்ளார்.

வவுனியா மாவட்டத்திற்கு பயணம் செய்து ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை அவர் பார்வையிட உள்ளார்.

வவுனியா மாவட்டத்திற்கு செல்லும் இவர்கள்  ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை அவர் பார்வையிட உள்ளனர். மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, நெலுக்குலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அவர்கள்  செல்லவுள்ளதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More