Home இலங்கை இலங்கை மீன்பிடிப் படகு ஒன்று இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது

இலங்கை மீன்பிடிப் படகு ஒன்று இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது

by admin


இலங்கை மீன்பிடிப் படகு ஒன்று இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது.இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் இந்தப் படகை மீட்டுள்ளனர்.

தனுஸ்கோடிக்கு அருகாமையில் உள்ள முகுந்தயார் சேத்திரம் கடல் பகுதிகளில் பைபர் கிளாஸ் படகு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் மீன்பிடி வலைகளும், மண்ணெண்ணையும் படகிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்த படகு நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்களினது என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் படகு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் படகை மீளவும் எடுத்துச் செல்ல முடியாத நிலையில் கைவிடப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த படகு தொடர்பில் சந்தேகப்படும் வகையில் எதுவுமில்லை என க்யூ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More