Home இலங்கை கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

by admin

கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின்தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

இன்று திங்கள் கிழமை காலை ஒன்பது மணி தொடக்கம் பத்து மணி வரை கிளிநொச்சி கோணாவில் பிரதான வீதியில்  நின்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

வட மாகாண கல்வி அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில  பாடசாலைகள் கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு  தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கேப்பாபிலவில்  பல மாணவாக்ள இருபது நாட்களாக பாடசாலைக்கு  செல்லாது வீதியில்  நிற்கின்றனர் தங்களது வீடுகளுக்குச் செல்வதற்காக ஆனால் அவர்களது கோரிக்கை இதுவரை தீர்த்து  வைக்கப்படவில்லை இதனால் அந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  சில வருடங்களுக்க முன்  யுத்தத்தால் தமிழ் மாணவர்களின் கல்வி பாதிப்படைந்தது தற்போதும் அவர்களின் கல்வி கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு வழங்கவேண்டும் எனவும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் இராணுவமே எமது கல்வியை சீரழிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும், எமது பாடசாலை உமக்கு படை முகாமா போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More