பாகிஸ்தானில் நீதிமன்றம் அருகே இன்று காலை இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள சர்ச்சட்டா மாவட்டத்தில் இடம்பெற்ற இந்தக் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் ஒரு பிரிவான ஜமாத் உல் அஹ்ரர் அமைப்பு உரிமை கோரியுள்ளது.
நீதிமன்ற வாசலிலேயே தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால், உயிரிழப்புகள் குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
Spread the love
Add Comment