Home இந்தியா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

by admin


தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்தும், வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்  சுதந்திரமாக,  செயற்படவில்லை எனவும்  இதனால் ; எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி  சபாநாயகர்  அறிவித்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த   மனு இன்று காலை விசாரணைக்கு வந்த நிலையில் தி.மு.க. சார்பில் ஆஜரான சட்டத்தரணி  சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் மீது குற்றம் சுமத்தியதுடன்  தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக சபாநாயகரை துன்புறுத்தியதாக கூறுவது பொய் எனவும் தி.மு.க.  சட்டமன்ற உறுப்பினர்களை  தடுக்கும் நோக்கத்துடன் சபாநாயகர்  செயல்பட்டார் எனவும் வாதிட்டார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை 27ம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்த உயர்நீதிமன்றம்    சட்டசபையில் நடந்த அமளி தொடர்பாக வீடியோ ஆதாரங்களை வழங்கவும் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More