Home உலகம்ஸ்கொட்லாந்து யார்ட்டின் உயரதிகாரியாக முதல் முறையாக பெண் ஒருவர் நியமனம்

ஸ்கொட்லாந்து யார்ட்டின் உயரதிகாரியாக முதல் முறையாக பெண் ஒருவர் நியமனம்

by admin


ஸ்கொட்லாந்து யார்ட் (scotland yard)  என அழைக்கப்படும் லண்டன் மாநகர காவல்துறையின் உயரதிகாரியாக முதல் முறையாக,  பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதன்முறையாக நியமிக்கப்பட்டிருக்கும் கிரெஸ்ஸிடா டிக் (Cressida Dick) என்னும் இந்த பெண் உயரதிகாரியின் தலைமையில்    காவல்துறை  அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம் 43,000 பேர் பணியாற்றவுள்ளனர்.

தீர்க்க முடியாத பல்வேறு வழக்குகளைக் கூட தீர்த்து வைப்பதால் ஸ்கொட்லாந்து யார்ட் புகழ் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More