Home இலங்கை பாலகனுக்கு மதுபானம் ஊட்டிய நபர் கைது

பாலகனுக்கு மதுபானம் ஊட்டிய நபர் கைது

by admin

சிறிய குழந்தை ஒன்றுக்கு மதுபானம் ஊட்டிய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒக்கம்பிட்டி பஹலகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு வயது 9 மாதங்கள் பூர்த்தியான குழந்தையொன்றுக்கு பலவந்தமாக மதுபானம் ஊட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பிள்ளை மொனராகல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

33 வயதான நபர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று வெல்லவாய நீதிமன்றில் முன்னிலப்படுத்தப்பட உள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More