Home இலங்கை தமக்கு உதவி வழங்கிய இலங்கையர்களுக்கு உதவுமாறு ஸ்னோவ்டன் கோரிக்கை

தமக்கு உதவி வழங்கிய இலங்கையர்களுக்கு உதவுமாறு ஸ்னோவ்டன் கோரிக்கை

by admin


தமக்கு உதவி வழங்கிய இலங்கையர்களுக்கு உதவுமாறு  அமெரிக்காவில் பல்வேறு இரகசிய தகவல்களை  அம்பலப்படுத்தியதாக தெரிவிக்கப்படும்  எட்வட் ஸ்னோவ்டன் கோரிக்கை விடுத்துள்ளார். ஹொங்கொங்கில் தமக்கு உதவிய இரண்டு இலங்கைக் குடும்பங்களுக்கும் உதவுமாறு டுவிட்டர் மூலம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைப் புலனாய்வு பிரிவினர் குறித்த இலங்கையர்களை பின்தொடர்வதாகவும் அவர்களுக்கு முடிந்தவர்கள் உதவியளிக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் சித்திரவதைகளில் ஈடுபடுபவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை குறித்த இலங்கையர்களை பின்தொடரவில்லை என இலங்கைக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More