Home இந்தியா ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்

ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்

by admin


ரமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக  அறிவித்துள்ளனர். இலங்கைக் கடற்படையினர் தொடர்ச்சியாக தமது மீனவர்களை கைது செய்வதுடன், மீன்பிடிப் படகுகளையும் கைப்பற்றுவதாக குற்றம் சுமத்தியுள்ள அவர்கள் இலங்கைக் கடற்படையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் 11ம் மற்றும் 12ம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் திருவிழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி நாளை முதல் கால வரையறையற்ற போராட்டமொன்றை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடாது இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More