இந்தியா பிரதான செய்திகள்

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்


இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து  தங்கச்சிமடம் மீனவர் சங்கத்தினரும் உறவினர்களும்  சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 21 வயதான பிரிஜ்ஜோ என்ற மீனவர்  கொல்லப்பட்டுள்ளதுடன்  24 வயதான  சரண்  என்பவருக்கு காயமேற்பட்டுள்ளது.

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரில் உறுதிமொழி வழங்கும்வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்து  அவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும்  சென்னையில் உள்ள இலங்கை தூதரை வெளியேற்ற வேண்டும் எனவும்   தெரிவித்துள்ள அவர்கள் இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி சரியான முடிவு எடுத்தால் மட்டுமே உடலை வாங்குவோம் எனவும்தெரிவித்துள்ளனர்.

அத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டின மீனவர்களும்  இன்று போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.