Home இலங்கை தருணியகல – மாகல பகுதியில் சிறுமி உட்பட இருவர் கொலை

தருணியகல – மாகல பகுதியில் சிறுமி உட்பட இருவர் கொலை

by admin

 
தருணியகல – மாகல பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் அவர் தற்போது அப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறை  ஊடகப் பேச்சாளர் அலுவலகம்  தெரிவித்துள்ளது.

நேற்று இரவு மாகல பகுதியிலுள்ள வீடொன்றில் ஏழு வயது சிறுமி  ஒருவரும் அவரது 45 வயது உறவினரான ஆண் ஒருவரும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சம்பவத்தில்  உயிரிழந்த  சிறுமியின் தாயார் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் என்ன காரணத்துக்காக மேற்படி சம்பவம் இடம்பெற்றது என்பது தெரியவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More