மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க அனுமதிக்குமாறு கூட்டு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். விசாரணைகளுக்கு அனுமதியளிக்குமாறு கோரி கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க அனுமதிக்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கையொப்பமிட்டு ஆவணமொன்றை கையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment