Home இலங்கை பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் நீதிமன்றில் முன்னிலை:

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் நீதிமன்றில் முன்னிலை:

by admin


பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் நோரிஸ் க்ரீன் பிரதேசத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

38 வயதான திருக்குமரன் சிற்றம்பலம் என்பார், மூன்று பாடசாலை மாணவர்களால் தாக்கப்பட்டிருந்தார் எனவும் தாக்குதல் நடத்தியவர்கள் பதின்ம வயதுடைய பாடசாலை மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையரான அவரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு எச்சரித்தபடியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்த தாக்குதலின் நோக்கம் இனவாதமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கெட்டவார்த்தைகளினால் தூற்றி இவர்கள் குறித்த இலங்கைத் தமிழரைத் தாக்கியுள்ளனர். தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் நீதிமன்றில் முன்னலையாகியுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More