Home இலங்கை கட்டாருக்கான தூதுவராக ஏ.எஸ்.பி லியனகே நியமனம்

கட்டாருக்கான தூதுவராக ஏ.எஸ்.பி லியனகே நியமனம்

by admin


கட்டாருக்கான தூதுவராக ஏ.எஸ்.பி லியனகே  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல வர்த்தகரான லியனகே இதனை  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நியமனம் வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

லியனகேவை கட்டாருக்கான தூதுவராக நியமிப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு உயர் பதவிகளுக்கான ஜனாதிபதிக்குழுவிற்கு கடந்த ஜனவரி மாதம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More