Home இந்தியா இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவரின் உடலை வாங்க மறுத்து 6வது நாளாக போராட்டம் தொடர்கின்றது :

இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவரின் உடலை வாங்க மறுத்து 6வது நாளாக போராட்டம் தொடர்கின்றது :

by admin

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட  மீனவர் பிரிட்ஜோவின்  உடலை  வாங்க மறுத்து, தங்கச்சிமடத்தில் மீனவர் கள் போராட்டம் 6ம் நாளாக இன்று தொடர்கின்றது.

உரிய நியாயம் வேண்டும் என்று கோரி உடலை வாங்க மறுத்து பெற்றோர்களும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்களும்  போராட்டத்தை மேற்கொள்ளும் நிலையில் நேற்றையதினம் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல் வம், ஜவாஹிருல்லா ஆகியோர் நேரில்    அந்த மக்களை சந்தித்து ஆதரவு தெரி வித்துள்ளனர்.

அங்கு கருத்து தெரிவித்த  மு.க.ஸ்டாலின் தமிழக மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றமை குறித்து மத்திய அரசு கண்டிக்காததும், தமிழக அரசு உரிய அழுத் தம் கொடுக்காததும் கண்டனத்துக் குரியது எனவும் மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத் தீவை மீட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More